Tuesday, September 10, 2013

ஆரம்பமாகியது தபால் மூல வாக்குப்பதிவு

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நேற்று(09.09.2013) திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.

நேற்றைய தினம் வாக்குப்பதிவு செய்யாதவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை தங்களுடைய வாக்குக்களை பதிவு செய்ய முடியும்.

இந்த தபால் மூல வாக்களிப்பில் தகுதி பெற்று இந்த இரண்டு தினங்களிலும் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம், 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment