Sunday, September 8, 2013

தயாசிரி அதிக வாக்குகளால் வெற்றி பெறுவதாக கோடிக் கணக்கில் பந்தயம்!

கூட்டணியின் வடமேல் மாகாண வேட்பாளர் தயாசிரி ஜயசேக்கர இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் அதிக வாக்குகளால் வெற்றி பெறுவார் என குருணாகலை பிரதேசத்திலுள்ள பிரபல வியாபாரிகள் பலரும் பந்தயம் பிடித்துள்ளனர். இவர்களின் பந்தயம் கோடிக்கணக்கான ரூபாக்களுக்கான பந்தயமாகும் என அங்கிருந்து கிடைக்கின்ற நம்பகத்தன்மை மிக்க செய்திகள் குறிப்பிடுகின்றன.

என்றாலும், இதற்கு எதிராக பந்தயம் பிடிக்க ஒருவரும் முன்வராமல் இருப்பது தயாசிரியின் வெற்றியையே எதிர்வு கூறுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கோடி ரூபாய்களுக்கு பந்தயம் பிடிக்க பிரபல வியாபாரி ஒருவர் முன்வந்தபோதும், நேற்று (07) அவருக்குப் பந்தயம் பிடிக்க வேண்டாம் என தயாசிரி அறிவுறுத்தியுள்ளார். பின்னர் அது பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்குக் காரணமாக அமையும் என்ற காரணத்தினாலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படையாக பந்தயத்திற்கு அவ்வியாபாரி அழைத்துள்ள போதும், இதுவரை அவருக்கு எதிராக யாரும் எழுந்து நிற்காமை குறிப்பிடத்தக்கது.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment