Sunday, September 8, 2013

கலாநெஞ்சனுக்கு மூன்று முதலிடங்கள்

நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடாத்திய 2013 ஆம் ஆண்டுக்கான நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவிற்கான இலக்கியப் போட்டிகளில் ஊடகவியலாளரும் கவிஞரும், எழுத்தாளருமான கலாநெஞ்சன் சாஜஹான் மூன்று முதலிடங்களைத் தட்டிக் கொண்டுள்ளார்.

கவிதை, சிறுகதை, பாடலாக்கப் போட்டிகளிலேயே சாஜஹான் இம்முதலிடங்களைப் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட இலக்கியப் போட்டியிலும் சாஜஹான் மூன்று முதலிடங்களைப் பெற்றுள்ளார்.

இவர், இரண்டு கவிதைத் தொகுதிகளையும், இரண்டு இஸ்லாமியப் பாடல் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளதுடன். பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்து பல பரிசில்களையும் தட்டிக் கொண்டுள்ளார். கல்வி முதுமாணிப் பட்டப்படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் எம். இஸட். சாஜஹான் கவித்தீபம், சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment