Monday, September 16, 2013

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் ஜனாதிபதி மகிந்த

கிளிநொச்சியில் அரசினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ நேரில் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சிறுவர் களுடன் கலந்துரையாடியுள்ளார்.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு வருகைதந்த ஜனாதிபதி செஞ்சோலைக்கும் சென்றிருந்தார் இதன்போது செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வாழும் சிறுவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அங்குள்ள தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு நவீன வசதிகளை பெற்றுக் கொடுப்பது, பௌதீக வளங்களை வளப்படுத்துவது மற்றும் அங்குள்ள சிறுவர்களது நலன்சார்ந்த விடயங்களை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

செஞ்சோலை சிறுவர்கள் அங்கு விஜயம்செய்த ஜனாதிபதியை வரவேற்றதுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து ஆனந்தக் குதூகலித்தனர் இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, செஞ்சோலை நிர்வாகி குமரன் பத்மநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com