Monday, September 9, 2013

ஓன்பது லட்சத்திற்கும் அதிகமான தொகையை மேசடி செய்த பெண் கைது!

கடுவன்னாவ, மக்கமுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொ ருவர் ஓன்பது லட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது அவரை விளக்கமறியலில் வைக் குமாறு புத்தளம் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 11 ம் திகதி வரை குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவன்னாவ , மக்கமுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் , ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.

கற்பிட்டியை சேர்ந்த நபரொருவரை இங்கிலாந்துக்கு அனுப்புவதாக கூறி, அவரிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளது. விசேட பொலிசார், குறித்த பெண்ணை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டதற்கான வங்கி பற்றுச்சீட்டுக்களை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அதனடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டு குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment