Friday, September 6, 2013

இலங்கைகு இரு யுத்த கப்பல்களை வழங்குகின்றது இந்தியா!

சமுத்திரத்தின் எல்லைப் பகுதிப் பாதுகாக்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு இரு யுத்த கப்பல்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. சமுத்திரத்தின் எல்லை ரோந்து நடவடிக்கைகளுக்காக இரு கப்பல்களும் வழங்கப்படுவதாக இந்தியாவின் கோவா கடற்படை படகு தயாரிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ப்ரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதுடன் குறித்த கப்பல்களை இலங்கைக்கு வழங்கும் போது தமிழ்நாட்டிலுள்ள சிலர் எதிர்ப்பை தெரிவிக்கலாமென குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்திய அரசாங்கம் இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் யுத்த கப்பல்களை இலங்கைக்கு வழங்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com