Tuesday, September 3, 2013

நரி வாலினால் கடலை வற்றச்செய்யும் முயற்சி ஒருபோதும் பலிக்காது - ஹக்கீம்

அரசின் பங்காளி என்ற வகையில் அரசாங்கத்தையும், ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்தையும் சீர்குலைப் பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்ட மொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கு யாராவது முயற்சியை எடுப்பார்களாயின் உரிய நேரத்தில் பாடம் கற்பிப்பதற்கு தன்னுடைய கட்சிக்கு முடியுமென்றும் அரசாங்கத் திற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான உறவை புரிந்து கொள்ளாத சில அமைச்சர்கள் தன்னுடைய கட்சியை அரசாங்கத்திலிருந்து தூக்கி வீசுவதற்கு முயற்சித்தாலும் அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது சரியாக "நரி வாலினால் கடலை வற்றச்செய்யும் முயற்சியாகும்" எங்களு டைய தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பாதுகாப்பது எங்களுடைய பொறுப்பாகும் என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com