Sunday, September 15, 2013

கீதாவைக் காணும் போது மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் என்னில்... என்கிறார் மர்வின்!

வடமேல் மாகாண சபையின் வேட்பாளர் ஜொஹான் பிரனாந்துவுக்கு ஆதரவு வழங்குவதற்காக நிக்கவரவெட்டி யவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மர்வின் சில்வா மற்றொரு திருமணத்திற்கான அழைப்பினை விடுத்துள்ளார். கீதா குமாரசிங்கவையே மணவாட்டியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மர்வினுக்கு வந்துள்ளது.

‘கீதாவை இப்போது காணும்போது கூட அவரை எனக்குத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் போல் தோன்றுகின்றது’ என்று அமைச்சர் குறிப்பிட் டுள்ளார்.

‘நான் எவரதும் தேர்தல் மேடைகளுக்கு ஏறவில்லை... அவர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக... என்றாலும் ஜெஹானுக்கு உதவுவேன். ஜோன்ஸ்டன் ஜனாதிபதியை பாதுகாப்பதனால்..ஜொஹான் முதலிடத்திலே யே வந்துவிடுவார். ஜொஹானுக்கு முதலமைச்சர் பதவி வழங்காதிருந்தால்,ஜொஹானுக்காக நான் உண்ணாவிரதம் இருப்பேன்’ எனவும் மர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இருந்த போதும், மர்வின் சில்வா மேடையை விட்டு இறங்கிச் சென்றதும் கீதா குமாரசிங்க, ‘அந்தக் காலத்தில் நடிகனாவதற்கான பைத்தியம் உங்களுக்கு இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்னரேனும் இவ்விடயம் பற்றித் தெரிவித்திருந்தால் யோசித்திருப்பேன்... பாவம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment