Sunday, September 15, 2013

கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த பாரிய ரயில் விபத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்!

கிளிநொச்சி புகையிரத கடவையில் இடம்பெறவிருந்த பாரிய விபத்து போக்குவரத்து பொலிஸாரின் சாமர்த்தியத் தினால் தவிர்க்கப்பட்டது. கிளிநொச்சி புகையிரத நிலையத் திற்கு அருகிலுள்ள கனகபுரம் ரயில் கடவையிலேயே இந்த அனர்த்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற விருந்தது.

ரயில் வருவதற்கான சமிக்ஞை காண்பிக்கப்பட்டு கடவையும் மூடப்பட்டது. அதனை கவனத்தில் கொள்ளாத பயணிகளோ அந்த தடுப்புகளுக்கு இடையில் தங்களுடைய வாகனங்களுடன் ஒரேடியாக சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த அங்கு கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸார். விரைந்து செயற்பட்டு தடுப்பை மீறி செல்பவர்களை தடுத்துநிறுத்தினர். இதனை யடுத்தே ரயில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளது.

No comments:

Post a Comment