Saturday, September 14, 2013

மகளை வல்லுறவிற்குட்படுத்தி கொலை செய்த காமுகத் தந்தைக்கு மரண தண்டனை!

தனது 16 வயது மகளை வல்லுறவிற்குட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு 16 வயதாக இருந்த தனது மகளை பாலி யல் வல்லுறவிற்கு உற்படுத்திய பின் அவரை கொலை செய்ததாக அந்த சிறுமியின் தந்தைக்கு எதிராக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. கொலை, பாலியல் வல்லுறவு, மற்றும் சிறு வயதுடைதானவரை அபகரித்தல் ஆகிய குற்றங்களை சுமத்தியே அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றங்களில் அவரை குற்ற வாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப் பளித்தது.

No comments:

Post a Comment