Tuesday, September 10, 2013

நான், குடும்பத்தோடு தற்கொலை செயது கொள்ளப் போகின்றேன் - படத் தயாரிப்பாளர் நாகராஜன்!

நான் குடும்பத்தோடு தற்கொலை செயது கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என "கோழிகூவுது" படத்தின் தயாரிப்பாளர் ஏ.நாகராஜன் பொலிஸில் தெரிவித்துள்ளார். குறித்த படத்தயாரிப்பாளர் ஏ.நாகராஜனை மீட்டர் வட்டி கும்பல் ஒன்று மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் புகார் மனு அளித்தார் நாகராஜன்,. அந்த மனுவில் அவர் தெரிவித்திருப் பதாவது:

நான் இரும்பு வியாபரம் செய்து நல்ல வசதியாக வாழ்ந்து வந்தேன். எனக்கு மல்லிகா என்ற மனைவியும், அஸ்வின் குமார், மிதுனா ஆகிய வாரிசுகளும் உள்ளனர். ரூ.75 லட்சம் செலவில் தரமான சினிமாவை எடுத்து விடலாம் என்று என் நண்பர்கள் சிலர் கூறிய ஆலோசனைப்படி சினிமா தயாரிப்பாளர் ஆனேன்.

நடிகர் அசோக், நடிகை சிஜோ ரோஸ் ஆகியோர் நடிக்க கோழிகூவுது என்கிற பெயரில் சினிமா தயாரானது. ரூ.75 லட்சத்தில் படத்தை முடித்து விடலாம் என்ற இலக்கு ரூ.2 கோடியே ல்75 லட்சத்தில் முடிந்தது. ஒரு கோடியே 75 லட்சம் பணத்தை மீட்டர் வட்டிக்கு வாங்கியிருந்தேன். இந்தப் படம் 28-12-2012 - இல் வெளியானது. 60 திரையரங்குகளில் வெளிப்பட்டு சில நாட்கள்தான் ஓடியது. படம் தோல்வியைத் தழுவியதால் எனக்கு கடன் தந்தவர்கள் பணத்தைக் கேட்டு மிரட்டத் தொடங்கினார்கள்.

நடிகர் நடிகையர்களுக்குக் கூட சம்பள பாக்கி வைக்கவில்லை. மொத்தம் 20 பேரிடம் கடன் வாங்கியுள்ளதில் 18 பேருக்கு வட்டியாக மட்டுமே சுமார் 50 லட்சம் வரை செலுத்தியுள்ளேன்.

இந்த நிலையில் என்னை என் குடும்பத்தினரோடு தீயில் கொளுத்தி கொலை செய்துவிடுவதாக கரூர் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த 4 பேர் மிரட்டியுள்ளனர். என்னை வீடு தேடி வந்து அவர்கள் மிரட்டுவதால் நான், குடும்பத்தோடு தற்கொலை செயது கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

அவர்கள் எங்களை கொலை செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன். எனவே மீட்டர் வட்டி கும்பலிடமிருந்து எனது குடும்பத்தைக் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment