Saturday, September 14, 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரத்தில் பிரபாகரன்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிரிசிங்க தெரிவித்தார்.

கொடிகாமம் நகரப் பகுதியில் மேற்படி துண்டுப்பிரசுரம் விநியோகித்த வேளையிலேயே குறித்த நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும், 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட வேளையில், அவர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்கள், வடமாகாண சபை தேர்தல் பிரசாரத்தினை மேற்கொள்வதற்காக வீடு மற்றும், வர்த்தக நிலையங்களில் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக அவர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment