Monday, September 16, 2013

வன ஜீவராசிகள் பாதுகாப்பிற்கு விண்ணப்பம் கோரல்

வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தொழில்நுட்பம் சாராத பாகம் 2 இற்கான வன ஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலர் (wild Life Guard) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய் வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2013 இற்கான விண்ணப்பங்கள் இலங்கைப் பிரஜைகளிடமிருந்து கோரப்படுகின்றன.

விண்ணப்பங்கள் 22.09.2013 இற்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும்.

சிறந்த தேகாரோக்கியமுடைய 18 இற்கும் 30 இற்குமிடைப்பட்ட வயதுடையவர்கள் இலங்கையின் எப்பாகத்திலும் சேவையாற்றக் கூடிய சிறந்த மன நிலையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகைமை சிங்களம், தமிழ், ஆங்கிலமொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்தில் திறமைச்சித்தியுடன் ஒரே தடவையில் (06) பாடங்களில் க.பொ.த சாதாரணதரத்தில் சித்தியடைந்திருப்பதுடன் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஒரு பாடத்தில் சித்திபெற்றிருத்தல்வேண்டும்.

பரீட்சை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, உட்பட நாட்டின் ஏனைய நகரங்களிலும் நடை பெறும். மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் ஏனைய விபரங்களை 13.09.2013 அரச வர்த்த மானியைப் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment