Thursday, September 12, 2013

கந்தர்மடத்தில் இருவருக்கு வாள்வெட்டு!

யாழ். கந்தர்மடம் அரசடிப் பகுதியில் நேற்று (11.09.2013) இரவு இலக்கத்தகடுகள் துணிகளால் மறைக்கப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரால் ஜனசக்தி சன சமூக நிலையத்தடியில் நின்ற இரு இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது வாள்வெட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது அவ்விடத்தில். நின்ற மோட்டார்சைக்கிள்கள் சிலவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன், ஒரு துவிச்சக்கரவண்டி தீயிட்டுக் கொளுத்தப்பட்டு ள்ளது.

இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிக்கப் வாகனத்தின் கண்ணாடிகளையும் இக்குழு அடித்து நொருக்கிவிட்டுச் சென்று ள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்ததுடன், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தம்மை அடையாளம் காணமுடியாத வகையில் முகங்களை துணியினால் மறைத்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment