Tuesday, September 10, 2013

காதல் காரணமாக தமிழ் பெண்ணை கரம்பிடித்தான் முஸ்லிம் இளைஞன்!

மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் கொண்டிருந்த காதல் காரணமாக முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் நேற்று (08) இந்துமத முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஏறாவூர் முதலாம் குறிச்சியைச் சேர்ந்த புகாரி முஹம்மது நஜீம் லாபிர்கான் (28) என்ற முஸ்லிம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி (23) என்ற பெண்ணுக்கும் நேற்று (08) ஏறாவூர் 4 ஆம் குறிச்சி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்துமத கலாச்சாரத்திற்கேற்ப திருமணம் நடந்தேறியுள்ளது.

திருமணத்திற்காக தனது மார்க்கத்தினின்றும் நீங்கி இந்து மத்த்தைத் தழுவி, தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக் கொண்டுள்ளான் இளைஞன்.

இவர்களுக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் தலைமையில் விவாகப் பதிவாளர் திருமதி. கமலேஸ்வரி தம்பிராஜா திருமணப்பதிவு செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில்,

ஏறாவூர் முதலாம் குறிச்சியில் வசிக்கும் புஹாரி முஹம்மது நஜீம்கான் (28) என்ற முஸ்லிம் ஆசிரியர் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி (23) என்ற பெண்ணுடன் நீண்ட நாட்களாக காதல் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார். அந்தப் பெண்ணிடம் இந்துமதப்படி, இந்துமத்த்தைத் தழுவி திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்துள்ளார். அதற்கேற்பவே வாக்குறுதி மீறாது அவ்விளைஞன் சாந்தியைத் திருமணம் செய்துள்ளார் எனத் தெரியவருகின்றது.


(கேஎப்)

No comments:

Post a Comment