Tuesday, September 10, 2013

கட்சி தாவினார் கிரியோகநாதன்! கிரியோகநாதன் உட்பட 4 பேர் அரசிற்கு ஆதரவு தெரிவிக்க முடிவு!

வட மாகாண சபை தேர்தலில், சுயேட்சைக்குழுவில் 3ம் இலக்கத்தில் போட்டியிடும் குழு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது.

இம்முறை வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் 3ம் இலக்க சுயேட்சைக்குழுவின் தலைவரும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான என். கிரியோகநாதன் உட்பட 4 பேர், யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரசார மேடைக்கு வருகை தந்தனர்.

அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கிரியோகநாதனுடன், கிருஷ்ண மலர், கணபதி கதிரவேல், ஜே. ஞானலக்ஷ்மி ஆகியோர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர்.

2011ம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில், வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போட்டியிட்டு ஆயிரத்து 704 விருப்பு வாக்குகளை பெற்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் வசந்தநாதன் சிவநாதனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment