Saturday, September 7, 2013

4 ஆயிரம் குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சி! மாவோயிஸ் தீவிரவாதிகளின் அட்காசம்!

மாவோயிஸ்ட் அமைப்பை பலப்படுத்த 4 ஆயிரம் சிறுவர் களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பு சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு குழந்தைகள் சேர்க்கப்பட்டுள் ளதாக கூறப்படுகிறது.

10 வயது, அதற்கும் குறைவாக உள்ள சிறுவர்களும், 15 வயது சிறுமிகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக சிறுவர்கள் சேர்க்கப்பட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மாவோயிஸ்டுகளுக்கு சமையல் பணிக்காக சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment