Saturday, September 14, 2013

தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு

நடைபெறவுள்ள மாகாணசபைக்கான தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித் துள்ளார்.

இந்த உத்தரவுக்கு ஏற்ற வகையில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் தொடர்பில் கட்சிகளினாலோ சுயேச்சைக் குழுக்களினாலோ வேட்பாளரினாலோ வெளியிடப்படும் எந்தவொரு பிரசாரங்களையும் முன்னெடுக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்படி தேர்தல் பிரசாரங்கள், அரசியல் விளம்பரங்கள், அறிக்கைகளுக்கு, 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் பிரசுரிப்பதற்கும், ஒலி, ஒளி பரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment