Tuesday, August 13, 2013

கோமாரியில் நவீன கருவிகளுடன் புதையல் தோண்டிய வைத்தியரை தேடி வலை விரிப்பு.

கிழக்கு மாகாணம் தம்பிலுவில் கோமாரிப் பிரதேசத்தில் நவீன கருவிகளுடன் புதையல்தோண்டிய குழுவொன்றை இராணுத்தினர் மடக்கியுள்ளனர். இன்று காலை புதையல் தேடுதலில் ஈடுபட்டிருந்த குழுவை படையினர் சுற்றிவளைத்தபோது அந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் தப்பி ஓட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்த நவீன டிஜிரல் தேடுதல் கருவி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கருவி சுமார் 40 மீற்றர் ஆளத்தில் உள்ள தொல்பொருட்கள் , தங்கம் , வெள்ளி போன்றவற்றை கண்டுபிடிக்கும் சக்தி கொண்டதென படை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தப்பியோடியுள்ளவர்களில் ஒருவர் எம்பிபிஸ் வைத்தியர் எனவும் இரண்டாமவர் மக்கள் சுகாதார பரிசோதகர் (பிஎச்ஐ) எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த இருவரையும் கைது செய்வதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வலைவிரித்துள்ளனர்.

No comments:

Post a Comment