Thursday, August 22, 2013

தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் அனந்தி எழிலன் மன்னிப்பு கோர வேண்டும்!

தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர் களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடம் பகிரங்க பொது மன்னிப்பை அனந்தி எழிலன் கோரவேண்டும் என்று தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர்.சிவராஜா தெரிவித் துள்ளார்.

தமிழர்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் பேசவுள்ளதாக அனந்தி எழிலன் தெரிவித்திருப்பது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளராக எழிலன் இருந்த போது தான் மாவிலாறு அணையை இழுத்து மூடி இறுதிப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். நீரை வைத்து நிபந்தனை இட்டு போராடக்கூடாதென பல தரப்பில் கோரப்பட்டாலும் மாவிலாறு அணை விடயத்தில் எழிலன் எடுத்த மோசமான முடிவுகள் இறுதிப் போருக்கு வித்திட்டன.

போரில் பெருமளவு மக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டர் என கூறும் அனந்தி எழிலன் தனது கணவரும் இவற்றுக்கான மூலகர்த்தாக்களில் ஒருவர் என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து இப்போது மீண்டும் இவர்கள் உணர்ச்சி வசனங்களை பேசுவதன் நோக்கம் என்ன?

மாவிலாறு அணயை எழிலன் மூடியது சரி என்பதனை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட ஏற்க மாட்டார்.இறுதிபோரை ஆரம்பிக்க அடித்தளம் இட்டபோது எழிலனின் மனைவி உண்மையில் தமிழர்கள் மீது அக்கறை கொன்டிருந்தால் அணையை மூடும்போது அப்படியான பாரதூரமான செயலை செய்ய வேண்டாமென கணவரை தடுத்திருக்க வேண்டும்.அப்போது அமைதியாக இருந்து பேரழிவுக்கு துணை போன அனந்தி இப்பொது தமிழர்களை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பது அர்த்தமற்ற விடயமாகும்.

அணையை மூடியதன் பின்னர் புலிகள் இணக்கப் பேச்சு நடத்தும் சூழலில் இருந்து வெளியேற வேண்டி வந்தது.போர் மட்டும் தான் தீர்வு என மக்களை துன்பத்தில் தள்ளி விட்டு இப்போது எந்த முகத்தை வைத்து அனந்தி அரசியலுக்கு வந்துள்ளார் என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரின் பெயரை வைத்து அரசியல் நடத்தும் அனந்தி தனது கணவரின் தவறுகளுக்காக தமிழ் மக்களிடம் பொது மனிப்பைக் கோர வேண்டும்.அது மட்டும் பிராயச்சித்தமாக இருக்காது.வீரவசனங்ளை கூறி எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை வீணடிக்காதிருக்கவும் அவர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. இவள் புருஷன் தான் மாவிலாறு தண்ணியை பூட்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு உலை வைத்தவன். இவளுக்கு வோட் போடுபவன் எல்லாம் தமிழின துரோகிகள் , ஆனால் இலங்கை அரசு இவள் போன்றவர்களை உயிருடன் விட்டு இன்று மகிந்த டென் ஹாக்க் போக தயாராக வேண்டியது தான் , புலியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும், 1987 – 1990 ஆண்டுகளில் புலியை ஓட ஓட அடித்து பிரேமதாசாவின் கால்களில் விழ வைத்தவர்கள் யாரும் இப்ப ஆலோசனை சொல்ல இல்லையா ? எல்லோரும் சுரேஷ் , சுகு , சங்கரி போல் TNA யுடன் சேர்ந்து விட்டார்களா ?

    மற்றவர்கள் எல்லாம் சயநிட் அருந்த வேண்டும் , நீங்கள் மட்டும் ஆர்மியிடம் சரணடைவீர்கள் , அவர்கள் உங்களுக்கு கொத்து ரொட்டியும் பிரியாணியும் தருவார்கள் , என்ன ஒரு எதிர்பார்ப்பு , எப்படிப்பட்ட சுயநலவாதிகள், இவர்கள் தமிழ் ஈழம் பெற்று தருவார்கள் என 30 வருடமாக ஒரு முட்டாள் கூட்டம் இவர்கள் செய்த அட்டூழியங்களை ஆதரித்து வந்துள்ளது , இன்று கூட அப்படியான கூட்டங்கள் உள்ளது.

    யாரும் பொது மக்கள் இராணுவத்துடன் பேசினால் அவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் , ஆனால் புலித்தலைவன் மகன் இராணுவத்திடம் பொய் நக்குவானம் , என்ன கேவலம் கேட்ட கொலைக்கூட்டம் , வெக்கம் மானம் துளியும் இல்லை, வீரம் பற்றி இனியும் இவர்கள் பேசக் கூடாது

    ReplyDelete
  2. She is not really suitable to represent us,as she has a unpleasant background.

    ReplyDelete
  3. Our politics always leads to CHAOS,may be owing to our fate

    ReplyDelete
  4. வீரம் பற்றி இனியும் இவர்கள் பேசக் கூடாது

    ReplyDelete