Sunday, August 4, 2013

திருக்கோயில் ஆலயத்தை தரிசிக்கச் சென்றார் சிராணி! (படங்கள் இணைப்பு)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிராணி கடந்த வெள்ளிக் கிழமை (02) திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்துக்கு விஜயம் செய்து தலத்தை தர்சித்ததோடு ஆலயத்தை அலங்கரிக்க மின் விளக்குகள் அமைத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளர் கே.புஸ்பகுமாரின் அழைப்பின் பேரில் இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தபோதே அவர் ஆலய தரிசனத்தை மேற்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு பிரதேசத்திலுள்ள குறைகளை எடுத்துக்கூறிய இனியபாரதி எனப்படுகின்ற புஸ்பகுமார் குறித்த இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று நிலைமைகளை விளக்கியுள்ளார்.

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகளை காண்பித்து தேவைகளை எடுத்துக்கூறியபோது எடுத்துக்கோள்ளப்பட்ட படங்கள் இணைபில்.

வைத்தியசாலையின் குறை நிறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான உடனடி உத்தரவினை பா.உ விடுத்தாக அம்பாறை மாவட்டத்துக்கான ஜனாதிபதி இணைப்புக்காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



No comments:

Post a Comment