Friday, August 16, 2013

அநுராதபுரம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது!

அநுராதபுரம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் தொடர் பில் பல மாதங்களாக அனுராதபுரம் மாநகர சபைக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்று வந்தநிலையில், குறித்த பள்ளிவாசல் அநுராதபுரம் மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.

குறித்த பள்ளிவாசல் தொடர்பில் பேச்சுவார்த்தை கடந்த ஜுலை மாதத்தில் தோல்வியில் முடிவடைந்துள்ளதை அடுத்தே இந்த பள்ளிவாசலினை அகற்ற அநுராதபுரம் மாநகர சபை தீர்மானி த்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பள்ளிவாசல் உள்ள பிரதேசம் புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற காரணத்தினால் இந்த பள்ளவாசல் அகற்றப்பட்டுள்ளதுடன் இதற்கு குறித்த பிரதேச முஸ்லிம்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பள்ளிவாசல் அகற்றல் தொடர்பில் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னர் அநுராதபுரம் மாநகர சபை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment