Wednesday, August 28, 2013

இங்கிலாந்து வீரர்கள் ஓவெல் மைதானத்தில் செய்த செயல் அவர்களின் மிதமிஞ்சிய முட்டாள் தனமே - ஷேன்

இங்கிலாந்து வீரர்கள் ஓவெல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தமை மிதமிஞ்சிய முட்டாள் தனமான திமிர் பிடித்த செயல் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் பந்து ஜாம்வான் ஷேன்வோன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஏஷஷ் தொடரை இங்கி லாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்தும் 3 வது தடவையாக தொடரை வென்ற உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்கள் கொண்டாடினர்.

இதனால் உற்சாக மிகுதியில் பீட்டர்ஸன், ஸ்டுவட், புரோட், என்டர்ஸன் ஆகியோர் ஓவெல் மைதானத்தில் சிறுநீர் கழித்தனர். அப்போது அவுஸ்திரேலிய வீர்ரகளும் பத்திரிகையாளர்களும் மைதானத்தில் இருந்தனர். இதனால் இவ்விடயம் வெளி யில் கசிந்தது. கிரிக்கட் வீரர்களின் புனித இடமான ஆடுகளத்தை அசிங்கப்படுத்திய வீரர்களின் செயல் குறித்து தற்போத விசாரணை நடைபெறுகின்றது. இச்சம்ப வத்ததை ஷேன் வோன் கண்டித்தார்.

வீரர்களின் கொண்டாட்டம் என்பது ஓய்வறையில்தான் நடைபெற வேண்டும். மிகவும் பழைமை வாய்ந்த ஓவெல் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது இங்கிலாந்து வீரர்களின் மித மிஞ்சிய முட்டாள்தனமாக திமிர் பிடித்த செயல் என வோன் சாடியுள்ளார். இதே வேளை இங்கிலாந்து வீரர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஓவெல் மைதானத்தின் உரிமை நிறுவனமான சரே கவுன்டி கழகம் தெரிவித்துள்ளது.

1 comment: