Friday, August 23, 2013

தயாசிரியின் செயலாளர் சமூர்த்தி உத்தியோகத்தரைத் தாக்கிய கதை தெரியுமோ?

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வடமேல் மாகாண சபை அபேட்சகர் தயாசிரி ஜயசேக்கர வின் ஹெட்டிபொலயில் அமைந்துள்ள அலுவலகத்தில், சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் ஐயசேக்கரவின் செயலாளரினால் அடித்து உதைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் தமக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து ஹெட்டிப்பொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரி பத்திரனலாகே பியத்திலக்க ஏக்கநாயக்க எனும் பதுளை கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தான் அந்த அலுவலகத்தில் பகலுணவை எடுத்துவிட்டு, கை கழுவுவதற்காகச் செல்லும்போது அங்கு தண்ணீர் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே இவ்வாறு தன்னைத் தாக்குதற்கு காரணமாக அமைந்தது என சமூர்த்தி உத்தியோத்தர் பொலிஸாரிடம் முறைப்பட்டுள்ளனர்.

தயாசிரி ஜயசேக்கரவின் செயலாளராகிய காந்த என்பவரே தன்னைத் தாக்கியதாகவும் சமூர்த்தி உத்தியோத்தர் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும் இதுவரை இந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்படவில்லை என்பது தொடர்பில் பொதுமக்கள் கிசுகிசுக்கின்றனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment