Friday, August 16, 2013

யாழ் பாசையூரில் பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் மருத்துவமுகாம்

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்பு பிரிவினரின் மருத்துவ முகாம் இன்று(17.08.2013) வெள்ளிக்கிழமை பாசையூர் சென் அன்ரனீஸ் பாடசாலையில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்பு பிரிவினரின் மருத்துவமுகாமில் 200 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சைகனை பெற்றுக்கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமின் ஆரம்ப வைபவத்தில் 51 ஆவது படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் அபேநாயக்க, 512 படைப்பிரிவின் தளபதி கேணல் அஜித் பல்லேகல மற்றும் படையதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்தியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment