Monday, August 5, 2013

அடையாளம் காணப்படாத ஐந்து சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில்!

யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப் படாத ஐந்து சடலங்கள் இருப்பதாக யாழ் வைத்திய சாலையினர் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று ஆண்களின் சடலங்களும், ஒரு பெண்ணின் சடலமும் குழந்தையொன் றின் சடலமும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சடங்களில் ஊர்காவற்றுரை பகுதியில் கரை ஒதுங் கியிருந்த மூன்று சடங்களும் அடங்குகின்றன. இந்த மூன்று சடங்களும் கடந்த மாதம் 31ஆம் திகதியும் இம்மாதம் முதலாம் திகதியும் ஊர்காவற்றுரை பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக் கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இந்த சடலங்களை அடையாளம் காண்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த போது படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment