Saturday, August 10, 2013

ஆஷாத் பார்க் திறப்பு விழா (படங்கள் இணைப்பு)

கல்முனை கிறீன் பீல்ட் வீட்டு திட்டத்தில் அமையப் பெற்றுள்ள "ஆஷாத் பார்க்" திறப்பு விழா வைபவம் வெள்ளிகிழமை (09) மாலை 5.30க்கு நடை பெற்றது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட கிறீன் பீல்ட் வீட்டுத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத்தலைவர் ஏ.எம்.எம். கபூல் ஆசாத்தின் வழிகாட்டலில் நவீன வசதிகளை கொண்ட சிறுவர்,பெரியோர் என இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட பொழுது போக்கு அம்சங்களை கொண்டதாக இப் பூங்கா அமையப்பெற்றுள்ளது.

இத்திறப்பு விழா வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸாக், இப்பூங்காவின் ஸ்தாபகர் தேசமானிய நாசிருல் ஹக், ஏ.எம்.எம். கபூல் ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நோன்பு பெருநாளைக் கொண்டாடிய மக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இஷாரத்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com