Sunday, August 25, 2013

இலங்கைக்கு வந்துவிட்டேன்! நான், யாரையும் எதனையும் விமர்சிக்க வருகை தரவில்லை! - நவநீதம்பிள்ளை

உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நான், யாரையும் எதனையும் விமர்சிக்க வருகைதரவில்லை ஆனால், மனித உரிமைகளில் கவனம் செலுத்துவேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சபையின் கொழும்பு அலுவலக பிரதிநிதிகளை கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் சந்தித்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் ஒருவார காலத்திற்கு மட்டுமே நான் தங்கியிருப்பேன். அக்காலப்பகுதியில் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவிருப்பதுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக பிரதிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com