Monday, August 5, 2013

பாலத்திலிருந்து குதித்த யுவதியை பொலிஸார் காப்பாற்றினர் - மட்டக்களப்பு, கல்லடியில் சம்பவம்!

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திலிருந்து குதித்த யுவதியை அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் காப்பாற்றி யுள்ளனர். குறித்த யுவதி மாலை 05 மணியிலிருந்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அவரை பொலிஸார் அவ தானித்துக்கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையிலேயே அவர் பாலத்திலிருந்து திடீரென ஆற்றுக்குள் குதித்துள்ளார். விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண்ணை காப்பாற்றி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

தாழங்குடா பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதான பூபாலப்பிள்ளை மோசகலா என்பவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment