Friday, August 9, 2013

மானிய உரம் கடத்திய இருவர் கைது!

அரசினால் மணியமாக வழங்கப்பட்ட ஒரு தொகை உரவகைகளை லொறியில் கடத்தி சென்ற போது மாங்குளம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப் பட்டபோது அவ்விருவரையும் 22/08/2013 வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்வாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

ஆரசினால் வழங்கப்பட்ட உரங்களை கூடுதல் விலைக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் பொருட்டே இந்த மானிய உரங்கள் கொண்டு சென்றதாக பொலிஸார் நீதி மன்றுக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உரம் சம்பந்தமான பெறுமதியை கணக்கிட்டு மன்றுக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com