Friday, August 9, 2013

சூரிச் அடிஸ்வீல் முருகன் ஆலயக் கொடி ஏறியது.

சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தின் அடிஸ்வீல் முருகன் ஆலயத்தின் வருடாந்த மாகா உற்சவத்திற்கான கொடி இன்று 09.08.13 முற்பகல் ஏறியது. எதிர்வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழாவுடன் வருடாந்த மகோற்சவம் நிறைவுறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிஸ்வீலில் எழுந்தருளியுள்ள திருமுருகனுக்கு சொந்தமாக ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான 3500 சதுர மீற்றர் காணி கடந்த ஐந்தாம் திகதி கொள்வனவு செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் அடியார்கட்கு தெரியப்படுத்தினர்.

இச்செய்தியை கேட்ட அடியார்கள் மகிழ்சி பெருவெள்ளத்தில் ஆழ்ந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com