Tuesday, August 13, 2013

இரண்டு வாரங்களுக்குள் வெலிவேரிய பிரதேச மக்களின் பிரச்சினைக்க உரிய தீர்வு வழங்க வேண்டும் -ஜனாதிபதி

வெலிவேரிய சம்பவத்துக்கு அடித்தளமிட்ட தொழிற்சாலை தொடர்பில், உரிய தீர்மானம் மேற்கொள்ளப்படுமென ஜனா திபதி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில், எதிர்வரும் சில தினங்களுக்குள் உரிய தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் 22 ம் திகதி, வெளியிடப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெலிவேரிய சம்பவம் தொடர்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துறைசார் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்தியிருந்தார்.

அலரி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெலிவேரிய பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்க உரிய தீர்வு பெறப்படவேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குழாய் குடிநீர் விநியோகம் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment