Thursday, August 15, 2013

நல்லூர் ஆலய சூழலில் விழிப்புணர்வு சுவரொட்டிகள்!

நல்லூர் ஆலய சுற்றாடல், திருவிழா காலத்தில் நடைபெறும் திருட்டுச் சம்பவங்களை குறைக்கும் முகமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்வகையில் பொலிசார் விழிப்புணர்வுச் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

கடந்த வருடம் நல்லூர் திருவிழாவின் போது திருட்டு சம்பவம் தொடர்பில் பிடிபட்ட திருடர்களின் புகைப்படங்களை தாங்யிய விழிப்புணர்வு சுவரொட்டிகளை யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினர் காட்சிப்படுத்தி உள்ளதுடன் இவர்கள் போன்ற திருடர்களின் கைவரிசையில் இருந்து உங்கள் பணம், நகைகள் மற்றும் பொருட்களை பாதுகாத்துக்கொள்ள “விழிப்புடன் இருங்கள்” என்ற தொனிப்பொருளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com