Friday, August 9, 2013

உலக ஆதிவாசிகள் தின வைபவத்தில் ஜனாதிபதி! (படங்கள் உள்ளே)

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு தெஹியத்தகண்டி ஹேனானிகல கிராமத்தில் இன்று (09) நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா அத்தோ ஜனாதிபதியை வரவேற்றார்.

இவ்வைபவத்தின் போது ஆதிவாசிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வாழ்வாதாரப் பொதிகள் போன்றன ஜனாதிபதியால்கையளிக்கப்பட்டன.

இந்த நாட்டில் ஆதிவாசிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டி ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா அத்தோ ஜனாதிபதிக்கு நினைவூப் பரிசு வழங்கினார்.

இந்த வைபவத்தில் அமைச்சர் பி. தயாரத்ன-கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க - கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

ஜனக்க அழகப்பெரும















1 comments :

Anonymous ,  August 10, 2013 at 7:35 PM  

எல்லோரும் கோடாலியுடன் நிக்கின்றர்கள் , பிரபாகரனை தான் மண்டையில் கொத்தியாசே , அப்புறம் ஏன் இன்னும் கோடாலி ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com