Sunday, August 4, 2013

உ/த பரீட்சை பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

நீர்வேலி அத்தியாயர் இந்து கல்லூரியில் நாளை (05.08.2013) நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த யாழ். கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று(04.08.2013)காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக கடமையாற்றும் பண்டாரவளையை சேர்ந்த E.M.புத்ததாச (வயது 48) என்பவரே ஆவர்.

இவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவருவதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment