Sunday, August 4, 2013

சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் தாய் ஒருவர் தற்கொலை!

சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் யாழ்.சுதுமலை பகுதியிலுள்ள எட்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்கு அடிக்கடி வரும் சீட்டுக்காரரின் அவமான பேச்சைத் தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருவதுடன் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் இவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சீட்டு, மீற்றர் வட்டி, காசோலை மோசடி போன்ற செயற்பாடுகளால் அதிகளவான தற்கொலைகள் நடைபெற்றுவதாக பொலிஸார் தெரிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com