Sunday, August 4, 2013

ஜனாதிபதியின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று (03) சனிக்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த இப்தார் நிகழ்வு முதற்றடவையாக இந்த வருடம் கண்டியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஜனாதிபதிக்கு முஸ்லிம் பிரமுகர்களும் உலமாக்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com