Wednesday, August 14, 2013

தனிப்பட்ட நோக்கங்களுக்காக பஸ் கட்டணங்களை அதிகரிக்க முடியாது!

எவரதும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பஸ் கட்டணங் களை அதிகரிக்க முடியாது எனவும், பஸ் கட்டணங்கள் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் எதுவித தீர்மானங் களையும் எடுக்கவில்லை என அமைச்சர் சீ.பி ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக பஸ் கட்டணத்தினை கேடயமாக பயன்படுத்தி மக்களை சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கம் கேட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பஸ் கட்டணத்தை மறு சீரமைக்க முடியாது என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரையில் அரசாங்கம் எது வித தீர்மானங்களை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரசாங்கம் பல வசதிகளை செய்து கொடுத் துள்ளது எனவும், அதனை தொடர்ந்தும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பஸ் கட்டணம் மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன அனுமதி பத்திரத்தின் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் அதனை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment