Tuesday, August 27, 2013

சொன்னதை செய்யவில்லையாம் இலங்கை அரசு! பொதுபல சேனா

இலங்கை அரசாங்கம் ஹலால் சான்றிதழ் நீக்குவோம் என உறுதியளித்த போதும், அதை நீக்க தவறிவிட்டது என, பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. காலி யில் நடைபெற்ற கூட்டமென்றில் உரையாற்றும் போது பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரார் அதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஹலால் தொடர்பாக பௌத்த சமூகத்துக்கு ஒரு தெளிவான பதிலை கொடுக்க வேண்டும் என்றும், ஹலால் சான்றிதழை அறிமுகப்படுத்துதில் பசில் ராஜபக்ஷ ஒருபெரும் பங்களிப்பை செய்திருந்தார் என்று, முஸ்லிம் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment