Saturday, August 3, 2013

புதன்கிழமை தலைப்பிறை பார்க்குமாறு ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 07 ஆம் திகதி புதன்கிழமை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் உலமாக்கள், கதீப்மார்கள்,ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

07 ஆம் திகதி புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 06.29 மணி முதல் ஷவ்வால் மாத்த்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறும் தலைப்பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உடனடியாக நேரிலோ அல்லது 0115234044, 2432110, 01122390783, 0777366099 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment