Friday, August 16, 2013

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கைந்நூல் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

கிழக்குமாகாணத்தில் செயற்பட்டுவரும் முன்பள்ளி நிலையஆசிரியர்களின் திறன்களை விருத்திசெய்யும் வகையில் கிழக்கு மாகாண பலர் பாடசாலை கல்விப் பணியகமும் பிளான் ஸ்ரீலங்கா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கைந்நூல் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது அதிதிகள் அழைத்து வரப்படுவதையும் முதலமைச்சர் நஐீப் அப்துல் மஜீத் கைந்நூலின் பிரதியினை பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி எட்வட் நெற்றிடம் வழங்குவதையும் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை முன்பள்ளி தவிசாளர் பொன்.செல்வநாயகத்திடம் நூல்பிரதியை வழங்குவதையும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.



(பாண்டிருப்பு செ. துஷ்யந்தன்)

No comments:

Post a Comment