Friday, August 2, 2013

பாப்பரசரை இலங்கைக்கு அழைக்கிறார் மகிந்தர்!

பாப்பரசரை இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவிக்கின்றார்.

முதலாவது பிரான்சிஸ் பாப்பாண்டவருக்கு கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் பாப்பாண்டவர் கருத்துத் தெரிவிக்கையில் தனது ஆசியச் சுற்றுப்பயணத்தின்போது இலங்கைக்கும் போய்வருவதற்கு சிந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com