Tuesday, August 13, 2013

கொழும்பு வீட்டில் வேலைக்கு வந்த 3 பெண்கள் வெளிநாட்டில்! அதிர்ச்சியில் குடும்­பத்தினர்!

கொழும்­பிற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்­கென தல­வாக்­கலை பிர­தே­சத்­தி­லி­ருந்து அழைத்து வரப்­பட்ட மூன்று பெண்கள் குடும்பத்தா­ருக்கு தெரி­யாத வகையில் வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பாக குறித்த பெண்­க­ளி­னது குடும்பத்தார் அதிர்ச்­சியும், குழப்­பமும் அடைந்­துள்ள அதே­வேளை, இது தொடர்பில் தல­வாக்­கலை- லிந்­துலை பொலி­ஸா­ருக்கும், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணியகத்­திற்கும் முறைப்­பாடு செய்­துள்ளனர்.

தலைவாக்கலையிலுள்ள டீமலை, ட்ருப், இரா­ணி­வத்தை ஆகிய தோட்­டப்­ ப­கு­தியைச் சேர்ந்த குறித்த பெண்கள் 30,000 ரூபா மாதசம்­பளம், உட­னடி வேலை­வாய்ப்பு என்ற பத்­தி­ரிக்கை விளம்­ப­ரத்­தினை நம்பி கொழும்­புக்கு வேலைக்கு வந்­துள்ளனர்.

வேலைக்கு வந்த மூன்று பெண்களுக்கும் ஆசை வார்த்தைகளை காட்டி குறித்த வீட்டு உரி­மை­யா­ளர்கள் வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளதுடன் இவர்கள் மூன்று பேரும் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றுள்­ள­மையை வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­யகம் உறுதி செய்­துள்­ள­துடன் அவர்கள் எந்த நாட்­டிற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளனர், எங்கு வேலை பார்க்கின்றனர் என்பது பற்­றிய தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com