Thursday, August 22, 2013

நாளை மறுநாள் கொழும்புக்கு 12 மணித்தியாலங்கள் தண்ணீர் இல்லை!

களுகங்கைத் திட்டத்தின் கீழ் குழாய்நீர் வழங்கல் காரணமாக எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 8 மணி முதல் 12 மணித்தியாலங்கள் கொழும்பு நகரை அண்மித்த சில பகுதிகளில் நீர் வழங்கல் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் சபை குறிப்பிட்டது.

அதற்கேற்ப, வித்தியாலய வீதி, அதனுடன்தொடர்புடைய அனைத்துக் குறுக்குப் பாதைகளும், அளுத்மாவத்தையிலுள்ள எலிஹவுஸ் நீர்த் தடாகம் முதல் இராமநாதன் மாவத்தையிலுள்ள ஜோர்ஜ் ஆர் த சில்வா மாவத்தைச் சந்திவரைவுள்ள பகுதிவரை அதில் உள்ளடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.

(கேஎப்)

No comments:

Post a Comment