Tuesday, August 13, 2013

அவுஸ்திரேலியாவிற்கு பயணித்து கொண்டிருந்த 111 பேர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர். (படங்கள் உள்ளே)

காலி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்துள்ளது. கரையிலிருந்து 220 மைல் தொலைவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். 26 பெண்கள், 27 ஆண்கள் உட்பட 35 சிறுவர்கள் இவர்களில் அடங்குகின்றனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றபுலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்ப்பட்டனர்.

இவர்கள் கடலிலிருந்து பாதுகாப்புடன் படையினரால் அழைத்து வரப்பட்டனர். கூடுதலான சிறுவர்கள் இருந்தமையினால் படகினை வேகமாக செலுத்த முடியாத நிலைகாணப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களை கரைக்கு எடுத்து வர கூடுதலான நேரம் அவசியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வைத்திய வசதிகளை வழங்கவும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.














0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com