Thursday, July 25, 2013

TNA குடும்பங்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை குற்றம் சாட்டுகிறார் சுசில் பிரேமஜயந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் பற்றி பேசுகின்ற போதும் அவர்களது குடும்பங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதுடன் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கொழும்பிலேயே வாழ்ந்துவருவதாகக் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலளார் சுசில் பிரேமஜயந்த குற்றம் சாட்டியுள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அரசாங்கம் அபிவிருத்தி செய்து வருவதாகவும், வடக்கின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டி வருவதுடன் இவர்களில் சிலர் புறச்சக்திகளுடன் இணைந்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு மீண்டும் குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு தேர்தலில் வெற்றியீட்ட அரசாங்கம் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் எனக்குறிப்பிட்டதுடள் யார் தேர்தலில் வெற்றியீட்டினாலும் மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என சுட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com