Thursday, July 25, 2013

அகில இலங்கை தமிழ் தின தேசிய மட்டப்போட்டி​யில் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய​ம் பெரும் சாதனை!

அகில இலங்கை தமிழ் தின தேசிய மட்டப்போட்டியில் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயம் பெரும் சாதனை படைத்து ஊவா மாகாணத்திற்திற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளது. மேற்படி வித்தியாலய மாணவிகள் 08 போட்டிகளில் பங்குப்பற்றி 06 இடங்களில் வெற்றிப்பெற்றிருக்கின்றனர்.

பேச்சு போட்டியில் முதலாம் பிரிவில் ஆர்.திவிலாஷினியும் நடனம் மூன்றாம் பிரிவுற்கான போட்டியில் ஜி.ருக்ஷனாவும், தனி நடனம் ஐந்தாம் பிரிவிற்கான போட்டியில் இரண்டாம் இடத்தை டீ.கீத்தப்பிரியாவும், தனி நடனம் இரண்டாம் பிரிவுற்கான போட்டியில் என்.டினூஷாவும், தெரிவாகியதுடன் தனி நடனம் நான்காம் பிரிவில் மூன்றாம் இடத்தில் கே.கவித்ராவும் தெரிவாகியுள்ளார். திறந்த மட்ட தமிழறிவு வினாவிடை போட்டியில் எஸ்.மதுசிதா, எஸ்.பிரசன்னா, கே.சுபாஷினி, எஸ்.லதா, எஸ்.பிரசாந்தினி ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

மேற்படி வித்தியாலயத்தில் வெற்றிபெற்ற மாணவிகள், அதிபர்.திருமதி.செல்வரட்ணம் உள்ளிட்ட ஆசிரியைகளுடன் இணைந்து எடுத்துகொண்ட படத்தை இங்கு காணலாம்.

எஸ்.சிவகாந்தன்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com