Friday, July 5, 2013

நீங்கள் இராணுவத் தளபதியாக இருந்தபோது தான் எனது மகன் காணாமல் போனான். யாழில் சரத் பொன்சேகாவிடம் தாயொருவர்.

காணமல் போன எனது மகளை கண்டுபிடித்து தருமாறு முன்னாள் ராணுவத்தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத்பொன் சேகாவிடம் தாயொருவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வெள்ளிக் கிழமை யாழிலுள்ள தனியார்விடுதியில் நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலின்போதே மேற்படி வேண்டு கோளை குறித்த தாய் விடுத்துள்ளார் .

2006ம் ஆண்டு நடுப்பகுதியில் எனது மகன்களில் ஒருவர் இனம்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார.; அதைதொடர்ந்து எனது இரண்டாவது மகனும் காணமல் போயுள்ளார் இவ்வாறு காணமல்போன எனது மகன் தற்போது ராணுவத்தினருடன் இருப்பதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.

இது தொடர்பாக நான் பல அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் முறையிட்ட பொழுதும் எனக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததை அறிந்து உங்களை நம்பி இங்கு வந்துள்ளேன் நீங்கள்தான் எனது மகனை கண்டுபிடித்து தர உதவவேண்டும்!! என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



No comments:

Post a Comment