Monday, July 8, 2013

பிள்ளை வருவதற்கு முன்னர் இனவாத அலைகள் வீசுவதற்கான முன்ஆயத்தம் நடைபெறுகிறதாம்...! தயார் நிலையில் அரசு!!

மதவாதத்தை அடிப்படையாக்க் கொண்டு பிளவுகளை நாட்டுக்குள் ஏற்படுத்துவதற்கு தயாராகின்ற குழுக்கள் தொடர்பில் மிக உக்கிரம்மான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு அரசினால்அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப மத அமைப்புக்கள் என்ற பேரில் இனவாத்த்தையும் மத வாத்த்தையும் கிளரவுள்ளவர்கள் விடயத்தில் மிகவும் கவனமாக இருப்பதற்கு பாதுகாப்பு புலனாய்வுத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமையத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை இந்நாட்டுக்கு வருகை தருவதற்கு முன்னர் இந்நாட்டில் ஏதேனும் ஒரு அமைப்பில் பிளவினை ஏற்படுத்த சிலர் முனைந்து வருவதாக அடிபடுகின்ற செய்திகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் தெளிவற்றதொரு படத்தினை வரைந்து சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமானதுதான் என்பதுதான் என்பதை நிரூபிப்பதற்காக சதிகள் திரைமறையில் நடந்து கொண்டிருப்பதாக பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு நம்புகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment