Friday, July 5, 2013

கே-பி, தயா மாஸ்ரர் , தமிழினி ஆகியோரை தேர்தலில் இறக்குவது அரசின் சூட்சும். யாழ்பாணத்தில் பொன்சேகா.

முன்னாள் ராணுவத்தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத்பொன்சேகா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தார். யாழில் உள்ள விடுதியொன்றில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றுகையில் கே-பி, தயா மாஸ்ரர் , தமிழினி ஆகியோரை தேர்தலில் இறக்குவது அரசின் சூட்சும் என்றார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் : கடந்தகால யுத்தத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைத்து மக்களுமே பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளனர். யுத்தம் நடந்தபோது யுத்தத்தின் முடிவில் மக்களின் சகல பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என கூறி யுத்தத்தை நடத்திய அரசாங்கம் இப்போது அதை செய்யாமல் வேறுவிதமாக நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தோற்றுவித்து மக்களை திசைதிருப்பிவருகின்றது.

மக்களை எவ்வாறு நடத்துவது என்று அரசாங்கத்திற்கு தெரியவில்லை. அயல் நாடான இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்கவும் அரசிற்கு தெரியவில்லை. வடமாகாண சபைதேர்தல் நடைபெறவுள்ள இந்த சமயத்திலும் அரசு வடபகுதியில் புதிதாக பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கின்றது.

குறிப்பாக அரசாங்கத்தின் சார்பில் தேர்தலில் கேபி, தயாமாஸ்ரர், தமிழினி ஆகியோர் போட்டிடவுள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது இதுவும் அரசின் ஒரு சூட்சுமத்தையே காட்டுகின்றது.

தமிழ் மக்கள் நன்கு அறிந்தவர்களை தேரிதலில் நிறுத்துவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று அரசாங்கம் நினைத்துள்ளது அனால் அவர்களால் வெற்றிபெற முடியாது.

வடமாகாண சபை தேர்தலில் எனது கட்சியும் போட்டிடவுள்ளது நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததன் நோக்கம் எனது கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவுசெய்யவே, எனது கட்சியில் இணைய விரும்புபவர்கள் தாராளமகாக இணையலாம்.

எனது நோக்கம் நாடடிலுள்ள சகல மொழிபேசுகின்ற மக்களுக்கும் நிம்மதியான வாழ்ககையை உருவாக்குவதேயாகும் பெற்றுத்தருவதேயாகும்.
ஆகவே இந்த தேர்தலில் என்னை வெற்றியடைய செய்யுங்கள் என்று நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment